Wednesday, November 13, 2013

புத்தகங்களை இரவல் வாங்காமல் காசு கொடுத்து வாங்கி படிக்க வேண்டும்


- புன்செய்  புளியம்பட்டி புத்தக திருவிழாவில் கவிஞர் புவியரசு பேச்சு!

*********************************************************************************************************

        ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டி விடியல் சமூகநல இயக்கம் சார்பில் புத்தக திருவிழா நகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற நிகழ்சிக்கு அம்மா மெட்ரிக் பள்ளி செயலாளர் ராணி அன்பு அவர்கள் தலைமை தங்கினார். எஸ்.ஆர்.சி.மெட்ரிக் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜெகதாம்பிகை, சித்ரா சுப்ரமணியம், கே.வி.கே.பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் என்.பழனிசாமி, நியூ சென்ட்சுரி புக் ஹவுஸ் மேலாளர் என்.ரங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

         விழாவில் இருமுறை சாகத்திய அகாடமி விருது வென்ற மூத்த எழுத்தாளர் கவிஞர் புவியரசு அவர்கள் கலந்து கொண்டு " நான் ஒரு வாசகன் " என்ற தலைப்பில் பேசும் போது, புன்செய் புளியம்பட்டிக்கு இன்று கடவுள் வந்து இருக்கிறார். நான் கடவுள் என்று சொல்வது புத்தகங்களை. நீங்கள் 10 புத்தகங்களை படித்தால் 11 வது புத்தகமாக நீங்கள் மதிக்கபடுவிர்கள் என்றார் ஈரோடு தமிழன்பன். நீங்கள் புத்தகங்களை இரவல் வாங்காமல் காசு கொடுத்து வாங்கி படிக்க வேண்டும்.  ஓயாமல் படித்து கொண்டிருக்கும் போது உங்கள் உலகம் வேறாகும். நீங்கள் நூல்களை வாசிக்கும் போது அதனோடு ஒன்றி விடுவிர்கள். அவர்களுடைய அனுபவம் உங்களுடைய அனுபவமாக மாறிவிடும். பயணம் தான் வாழ்கை. பயணம் தான் அனுபவம். எல்லோரும் போய் சேருமிடம் ஒன்றுதான். சிறகுகள் இருந்தும் பெங்குவின் பறவை பறக்காது. அதைபோல் மனிதனும் சிலசமயம் பெங்குவின் பறவை போல் முயற்சிக்காமல் இருந்து விடுகிறோம். நாம் எதை விதைகிறோமோ அதுவே முளைக்கும். அநியாயத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுக்கின்ற மனிதராக இளைய சமுதாயம் மாற வேண்டும்.
        இன்று தமிழனை போல் அடையாளம் இழந்து கொண்டு இருந்கின்றவர்கள் யாரும் இல்லை. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். பிறமொழி சொற்கள் கலந்து பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்றார் காந்தி. இன்று நகரத்தின் நச்சு காற்று படாத இடமாக புன்செய் புளியம்பட்டி திகழ்கிறது. இங்கே நடைபெறும் புத்தக திருவிழா மிகவும் சிறப்புக்கு உரியது. இதனை நடத்து விடியல் சமூகநல இயக்கத்துக்கு எனது பாராட்டுகள்.தமிழில் புதிய புதிய நூல்கள் வந்தவண்ணம் உள்ளது. மு.வ., கல்கி, சாண்டில்யன், ந.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், கரிச்சான்குஞ்சு, கோணங்கி என எல்லா எழுத்தாளர்களுடைய புத்தகங்களையும் வாங்கி மாணவ மாணவியர்கள் பயன் பெற வேண்டும் என்றார்.
     இந்நிகழ்ச்சியில் விடியல் செயலர் எஸ்.ஜெயகாந்தன், விடியல் உறுப்பினர்கள் தருமராசு, லோகநாதன், சுபாசந்தர், சக்திவேல் , ரமேஷ்குமார்  ஆகியோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment